Tuesday, December 15, 2009

விருந்து


வேண்டிய
பொழுதினில்
விருந்தாவேன்

வெறுத்திடும்
வேளையில்
வேம்பாவேன்


தூண்டியே உணர்வினைத்
துடிக்க வைப்பாய்



துயிலவும் விடாமல்
துரத்திடுவாய்

நண்பனின் வேதனைப்
புரியலயா?

அன்பினை அடைத்து
வைப்பதுவா?

ஆவியை நிறுத்தத்
துடிப்பதுவா?

Tuesday, December 8, 2009

நினைத்தேன் வந்தாய்

உன்
அலுவலகத்தைக் கடக்கும்போது
நீ
வெளியே வரமாட்டாயா?
என
ஏங்கியது நெஞ்சம்.

ஆனாலும்
வண்டி மட்டுமே
கடந்து சென்றது
சில மில்லிமீட்டர் தூரம்.

அதிசயம்
ஆனால் உண்மை
என்னை முந்திக்கொண்டு
உன் முந்தானை
பறந்து சென்றது.

காதலால் கசிந்து
கண்களைத் தொலைத்து
நின்றேன்.

Wednesday, December 2, 2009

காதல் தேசம்


நம்

காதல் தேசத்தில்

உன்

வார்த்தைகள் தான்

தேசியகீதம்


உன்

கூந்தல் அசைவுகள் தான்

தேசியக்கொடி


உன்

மௌனம் தான்

கொள்கை முழக்கம்

Tuesday, December 1, 2009

பேராசை

திரையிசையில்
உன் பெயர்
ஒலித்தால்
என் காதுகள்
மீண்டும் மீண்டும்
எதிரொலிக்கும்

விளம்பரத்தில்
உன் பெயர்
உச்சரிக்கப் பட்டால்
நச்சரிக்கும்
என் காதுகள்.

பெயர் என்ன
அடையாளக் குறியீடு மட்டுமா?
உயிர் உறையும் உன்னதம்

அந்த
ஒற்றைச் சொல்லில்
ஒரு உலகமே அடங்கிக் கிடக்கின்றது.

ஆம்
என் ஆன்மா
உன் பெயரைக் கேட்டால் தான்
உயிர்த் துடிப்போடு