Tuesday, December 15, 2009
விருந்து
வேண்டிய
பொழுதினில்
விருந்தாவேன்
வெறுத்திடும்
வேளையில்
வேம்பாவேன்
தூண்டியே உணர்வினைத்
துடிக்க வைப்பாய்
துயிலவும் விடாமல்
துரத்திடுவாய்
நண்பனின் வேதனைப்
புரியலயா?
அன்பினை அடைத்து
வைப்பதுவா?
ஆவியை நிறுத்தத்
துடிப்பதுவா?
Tuesday, December 8, 2009
நினைத்தேன் வந்தாய்
உன்
அலுவலகத்தைக் கடக்கும்போது
நீ
வெளியே வரமாட்டாயா?
என
ஏங்கியது நெஞ்சம்.
ஆனாலும்
வண்டி மட்டுமே
கடந்து சென்றது
சில மில்லிமீட்டர் தூரம்.
அதிசயம்
ஆனால் உண்மை
என்னை முந்திக்கொண்டு
உன் முந்தானை
பறந்து சென்றது.
காதலால் கசிந்து
கண்களைத் தொலைத்து
நின்றேன்.
அலுவலகத்தைக் கடக்கும்போது
நீ
வெளியே வரமாட்டாயா?
என
ஏங்கியது நெஞ்சம்.
ஆனாலும்
வண்டி மட்டுமே
கடந்து சென்றது
சில மில்லிமீட்டர் தூரம்.
அதிசயம்
ஆனால் உண்மை
என்னை முந்திக்கொண்டு
உன் முந்தானை
பறந்து சென்றது.
காதலால் கசிந்து
கண்களைத் தொலைத்து
நின்றேன்.
Wednesday, December 2, 2009
காதல் தேசம்
Tuesday, December 1, 2009
பேராசை
திரையிசையில்
உன் பெயர்
ஒலித்தால்
என் காதுகள்
மீண்டும் மீண்டும்
எதிரொலிக்கும்
விளம்பரத்தில்
உன் பெயர்
உச்சரிக்கப் பட்டால்
நச்சரிக்கும்
என் காதுகள்.
பெயர் என்ன
அடையாளக் குறியீடு மட்டுமா?
உயிர் உறையும் உன்னதம்
அந்த
ஒற்றைச் சொல்லில்
ஒரு உலகமே அடங்கிக் கிடக்கின்றது.
ஆம்
என் ஆன்மா
உன் பெயரைக் கேட்டால் தான்
உயிர்த் துடிப்போடு
உன் பெயர்
ஒலித்தால்
என் காதுகள்
மீண்டும் மீண்டும்
எதிரொலிக்கும்
விளம்பரத்தில்
உன் பெயர்
உச்சரிக்கப் பட்டால்
நச்சரிக்கும்
என் காதுகள்.
பெயர் என்ன
அடையாளக் குறியீடு மட்டுமா?
உயிர் உறையும் உன்னதம்
அந்த
ஒற்றைச் சொல்லில்
ஒரு உலகமே அடங்கிக் கிடக்கின்றது.
ஆம்
என் ஆன்மா
உன் பெயரைக் கேட்டால் தான்
உயிர்த் துடிப்போடு
Subscribe to:
Posts (Atom)