Wednesday, July 28, 2010

பிறந்த நாள்


நீ
பிறந்த நாள்
என்
வாழ்க்கை மலர்ந்த நாள்.

எந்த நாளும்
நான்
இப்படி மகிழ்ந்ததில்லை.

உன்
பிறந்த நாள்
பிறப்பதற்கு முன்
எனக்கு விடிந்துவிடுகிறது.

ஓராண்டுக்கு முன்பே
நான்
புத்தாடை எடுத்துக்கொள்கிறேன்.

அடுத்த ஆண்டென்பது
என் அகராதியில்
அடுத்த நொடி.

நீ
எடுத்தடி வைத்தபோது
என் மனத்தில்
எத்தனை அதிர்வுகள்.

ஆழ்மன நாட்காட்டியில்
அப்படியே
அந்தப் பதிவுகள்.

பிறப்பொன்றும்
இறப்பதற்காக அல்ல
மறக்காமல்
உன்னை
மனத்தில் இருத்திக்கொள்ளவே.

வாழ்த்துச் சொல்ல
வார்த்தைக் கிடைக்கவில்லை
வாழ்கவென்று
தனக்குத்தானே சொல்லிக்கொள்வது
பைத்தியக்காரத் தனமல்லவா?

எத்தனைப் பேரைச்
சந்தித்திருப்பேன்
நீ மட்டுந்தானே
என் நெஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டாய் .

சித்திரை நிலவாய்
அமாவாசையிலும்
முத்திரை பதித்தாயே.

கவிதை
எழுத உட்கார்ந்தால்
அருவியென அளிப்பாயே.

உன்னை எழுதுதற்கு
ஏன்
ஓரவஞ்சனை செய்கிறாய்?

பிள்ளையார்
சுழி போட மறுப்பவன்
உன்
பேரெழுதியல்லவா
தொடங்குகிறேன்.

நீ
இல்லாவிட்டால்
என்
கவிதைப் புத்தகம்
வெறும் காகிதம் தான்.

அடிக்கடிப் பேசுகிறாய்
அலைபேசியில்
அலுவல் மொழி.

ஆன்மாவோடு
பேசுகிறேன்
அன்புமொழி.

கண்ணிலே அன்பிருந்தால
கல்லிலே தெய்வம் வரும்
பாடினாய்
தேடினேன்.

கூடு வேறு
வீடு வேறு
குடியிருக்கும்
உயிர் ஒன்று.

அருகருகே இருந்தாலும்
அணுவளவும்
நாம்
அத்துமீறியதில்லை.

நித்திரையிலும்
நிழலாடும்
நின் நிஜம.

பூக்களின் வாசம்
உன் புன்னகை நேசம்

நாக்கினில் வந்து
நடுத்தொன்டை இறங்கும்
வாக்கினை இழந்தேன்
உனை
வாழ்த்திடமுனைந்து.

ஈக்களே அமரா
இளம் பூங்கொத்தை
எஸ்.எம்.எஸ் அனுப்புகிறேன்.

உற்றத் துனையோடும்
உயிர் குழந்தைகளோடும்
கற்கண்டு தமிழ்போல
காலமெல்லாம் வாழ்க நன்றே