Thursday, April 29, 2010

மரணம்

அன்பை
ஆராதிக்காமல்
அடக்கிட முயன்றால்
ஆபத்து சூழந்து
அவசியம் வரலாம் மரணம்.

சேர்வதும் பிரிவதும்
தெய்வத்தின் செயலானால்
யார் விரும்பி ஏற்பார்
காதலர் பிரிவை விரும்பும்
கடவுளை.

உயிரின் தோற்றமே
காதலின் தோற்றம்

காதலின் வலிமையே
சாதலின் எளிமை

நெஞ்சுக்குள் குடிபுகுந்த
நேசவுயிர்
ஒருபோதும்
சென்றுவிட முடியாது
நினைத்தபடி தனியாக.

மரணங்கள்
காதலை
வாழவைத்துக் கொண்டிருக்கின்றன
மனிதன் தோன்றியது முதல்.

வாழும் புவியில்
வாழவே பிறந்தோம்
வாழட்டும் காதல்
மரணத்தை வென்று..

Tuesday, April 13, 2010


இன்றும் உன்னைச் சந்தித்தேன்
உணவகத்தின் கடைசி தளத்தில்
நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.
உன் முகம் பார்த்து
மலர்ந்தேன்.
அதரம் சிவந்து
என்னை ஆராதித்தாய்.

வாங்க என்று
ஓசையில்லாமல்
ஆசையாய் சொன்னாய்.

சிரிப்பு சிந்திய
மகிழ்ச்சியில்
நான்
சில கணங்கள்
கான்கிரீட் தூணானேன்.

இழுத்து விட்ட
ரப்பரென
மீண்டேன்
அடுத்த நொடி.

உன்னோடு சேர்ந்து
உணவருந்த
மற்றுமொரு வாய்ப்பு.

உன்னைக் கண்ட மகிழ்ச்சியில்
மனது நிரம்பி வழிந்தது
மழையைக் கண்ட பாலையாய்.

மின்வெட்டு போல
உன் வரவு புதிரானது
கண்கட்டு வித்தையாய்
உன்
தரிசனம்.

Saturday, April 10, 2010

கானல்


விருந்தொன்றில்
நீ
என் விருந்தானாய்.

உள்ளே நுழைகையில்
ஆயிரம் பார்வைகளில்
உன்
ஆடும் விழிகள்
என்னை
ஆட்கொண்டுவிட்டன.

கறி சோறு உண்பதைவிட
உன்
ஓரவிழி தரிசனம்
எனக்கு கிடைத்த ஆஸ்கார்.

கைக்கு கிட்டியது
வாய்க்கு எட்டாத நிலையில்
விருந்து
மருந்தானது.

உண்டு முடித்ததும்
உன்னோடு பகிர்வு
நான் அழைத்தேன்..
நானுந்தான்..

நண்பர்களுக்குப் புரியவில்லை
நம்முடைய உரையாடல்
உள்ளுறை பொருளாக
உள்ளத்துள்.

பரந்த உள்ளமுள்ள
எனக்கு
திறந்துவிடவில்லை
உன்
உள்ளக் கதவு.

அறிந்தும் அறியாமல்
புரிந்தும் புரியாமல்
நிரந்தரமானது காதல்.