
இன்றும் உன்னைச் சந்தித்தேன்
உணவகத்தின் கடைசி தளத்தில்
நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.
உன் முகம் பார்த்து
மலர்ந்தேன்.
அதரம் சிவந்து
என்னை ஆராதித்தாய்.
வாங்க என்று
ஓசையில்லாமல்
ஆசையாய் சொன்னாய்.
சிரிப்பு சிந்திய
மகிழ்ச்சியில்
நான்
சில கணங்கள்
கான்கிரீட் தூணானேன்.
இழுத்து விட்ட
ரப்பரென
மீண்டேன்
அடுத்த நொடி.
உன்னோடு சேர்ந்து
உணவருந்த
மற்றுமொரு வாய்ப்பு.
உன்னைக் கண்ட மகிழ்ச்சியில்
மனது நிரம்பி வழிந்தது
மழையைக் கண்ட பாலையாய்.
மின்வெட்டு போல
உன் வரவு புதிரானது
கண்கட்டு வித்தையாய்
உன்
தரிசனம்.
No comments:
Post a Comment