Thursday, May 20, 2021

கவிதைக்காரி

 நீ நடந்து வருகையிலே நிலமகளும் நாணும்

உடன்தொடரும் தென்றலும் உன் மென்மையிலே மயங்கும்
கவிதொடுத்து படிக்கையிலே கலையரங்கம் ஏங்கும்
கருத்து உவமை இனிமை கண்டு
கைத்தட்டி இரசிக்கும்
காதலோடு பாடும்போது கனிந்து மனது உருகும்
காரி உமிழ்வாய் சமூக அவலம் அவை கண்ணம் தொட்டு பார்க்கும்
எதிலும் பொறுமை நிதானம் உந்தன் இத்தனை உயரவெற்றி
எடுத்த செயலை முடிப்பதுதான் உனக்கு இத்தனை பெற்றி
கடுஞ்சொல் ஒன்றும் சொல்லாத கவிதைக்காரி நீயே
காலமெல்லாம் காதில் ஒலிக்கும் கவிதை நெய்வாய் தாயே
கேட்டு கேட்டு கிறுகிறுப்பேன் மழலைமொழியைப் போலே
கிளர்ந்து எழும் உணர்வுகளின் இருப்பிடமும் நீயே !
கவிதை உறவு நமக்குள் புகுந்து காதலாகி மலர
கமுக்கமாய் தொடருதம்மா கன்னித் தீவைப்போல
வாழ்வாங்கு வாழ்க நீயும் வண்டமிழைப்போல
ஏழேழு பிறவியிலும் தொடரும் இந்த உறவு
கவிதைக்காரி வாழ்க !காலம் வென்று வாழ்க !

காதலே! காதலே !

 வானம் மண்ணை மழைத்துளியால் முத்தமிடுதுடா -அந்த

கானக்குயிலும் கவிதை இசைத்து காதல் செய்யுதடா
உயிருக்கெல்லாம் காதல்தானே உந்துசக்தியடா
கயிறுமேல மேல வாழ்க்கையானாலும் காதல் பொதுவடா

பஞ்சுபோல பறக்கும் மனது காதல் வந்தாலே
பகலும் இரவும் மாறிவரும் காதல் சேர்ந்தாலே
பிஞ்சு மனசு காதல் வந்து பித்து பிடிக்குமடா
பிறந்த பிறப்பில் அப்போதுதான் பொருள் இருக்குமடா !

காச பார்த்து பணத்த பார்த்து காதல் வாராது
வேசம் போட்டால் வெறுமனே காதல் சேராது
ஆசை மட்டும் இருந்தால் காதல் அதுவும் வாராது
ஆழமான அன்பு இருந்தால் காதல் அடங்கி நிற்காது

ஒளியும் இலையும் கூட்டாஞ்சோறு ஆக்கும் காதலால்
ஓடை மணலும் உறிஞ்சி நீரைக் குடிக்கும் காதலால்
வளியை சுமக்கும் பலூனாய் காதல் பறக்கும் வானிலே
வலியும் பொறுத்து பொறுத்து காதல் வாழும் உலகிலே !

காதலுக்கு சாதிமதம் வேப்பிலை கசப்பு
கண்ணும் கண்ணும் சேர்ந்தபின்னே கருப்பட்டி இனிப்பு
சாதலும் ஏற்குமே காதலே!சண்டைகள் பார்க்குமே காதலே!
ஆதலினால் காதலொரு காவிய படைப்பே !

சட்டம் போட்டு தடுத்தாலும் அத்து மீறிடும் !
சனாதனம் தடுத்தாலும் வென்று நின்றிடும் !
பட்டம் பதவி பவிசு எல்லாம் காதல் பார்க்காது
பாலைவன சோலையாக காதல் மலருமே !

உயிரும் உயிரும் சேர்ந்துவாழ காதல் அவசியம்
உலகம் இதனை ஊன்றிவாழ பகைமை பறந்திடும்
தயிரில் நெய்யைப்போல வாழ்வில் காதல் இருக்கனும்
தழைத்து வாழ்க்கை நனிசிறக்க காதல் வளர்க்கனும்