Sunday, January 3, 2010

மடி


உன்னைப் பார்த்து
ஆனது சில நாட்கள்
எப்படியாவது சந்திப்பு
நிகழ்ந்துவிடும்

அப்படியொன்றும்
நடக்கவில்லை சமீபத்தில்
ஏனென்றும் தெரியவில்லை
எதற்கென்றும் புரியவில்லை.

வலிய வந்து
உன்னைப் பார்க்கவும்
முடிவதில்லை.

கரையைத் தொடும்
அலைகளாகவே
என் நினைவுகள்
எப்போதும் உன் காலடியில்.

உன்னைப் பற்றிய நினைவுகளும்
உன் சார்ந்த நிஜங்களும்
என்னை எப்போதும் கலவரமூட்டுகின்றன.

ஆனால்
என் மனம் மட்டும்
எப்போதும் உன்
மடியிலேயேக் கிடக்கிறது.