Sunday, January 3, 2010

மடி


உன்னைப் பார்த்து
ஆனது சில நாட்கள்
எப்படியாவது சந்திப்பு
நிகழ்ந்துவிடும்

அப்படியொன்றும்
நடக்கவில்லை சமீபத்தில்
ஏனென்றும் தெரியவில்லை
எதற்கென்றும் புரியவில்லை.

வலிய வந்து
உன்னைப் பார்க்கவும்
முடிவதில்லை.

கரையைத் தொடும்
அலைகளாகவே
என் நினைவுகள்
எப்போதும் உன் காலடியில்.

உன்னைப் பற்றிய நினைவுகளும்
உன் சார்ந்த நிஜங்களும்
என்னை எப்போதும் கலவரமூட்டுகின்றன.

ஆனால்
என் மனம் மட்டும்
எப்போதும் உன்
மடியிலேயேக் கிடக்கிறது.

6 comments:

  1. அடடா யார் அந்த பாக்கியசாலி பாலா சொல்லுங்க

    அருமை கவிதை

    அம்மாவைப் பற்றியது போலவும் இருக்கு

    ReplyDelete
  2. நன்றி தேனம்மை
    இப்படிப் பட்ட பாராட்டுகளாலேயே தொடரந்து எழுதவேண்டும் என்ற ஆவல் கூடுகிறது.
    இந்த அதிர்ஷ்டமில்லாதவனின் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் அழகி

    ReplyDelete
  3. ஏன் இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள் பாலா ?

    அதிர்ஷ்டமில்லாமலா நம் நட்பு அமைந்து இருக்கிறது ...

    அருமையான கவிதைகள் எழுதி வெளியிடுகிறீர்கள்...

    வெளிநாட்டுப் பயணம் .,இத்தனை விருதுகள் எல்லாவறிற்கும் நாம் கொடுத்து வைத்தவர்கள் பாலா

    ReplyDelete
  4. பாலா உங்களை ஒரு தொடர் இடுகை எழுத அழைத்து இருக்கேன் வந்து என்னோட பதிவைப்பாருங்க

    ReplyDelete
  5. நல்லாயிருக்குங்க பாலா...

    ReplyDelete
  6. நல்லா இருக்குங்க பாலா

    ReplyDelete