Thursday, January 17, 2019

பேசினாலும் ஏசினாலும்
பார்த்தாலும் மறுத்தாலும்
நேசிப்பின் சுவாசம் நீ
நெஞ்சத்தின் வாசம் நீ

எனை நீ மறந்தாலும்
உனைநான் மறவேனே
கனவாய் ஆனாலும்
காலங்கள் போனாலும்
நினைவெலாம் நீதானே
நித்தம் உன்குரல்தானே
நெஞ்சினிக்கும் தேன் தானே!

பிரியம்நீ என்றாலே
பெருமகிழ்ச்சி எனக்குள்ளே
திறவாய் உன்மனதை
தித்திக்கும் சிரிப்பாலே
விட்டு விட்டு சிரிக்கையிலே
விடாமல் பற்றிக்கொண்டு
கட்டுப்பட்டு கடக்குறேன்டி
உன் கலகல சிரிப்புக்குள்ளே!

No comments:

Post a Comment