Thursday, January 17, 2019

மாலை மதியழகில் -கண்ணமா
மதிமயங்கி
நின்றேனடி .

சோலைக் குயிலனைத்தும்- உன்
குரலிசை
பரப்புதடி

நா(ள்)ளை மறந்தேனடி - உந்தன்
நனவொன்றே
அணிந்தேனடி

பாலை மனத்தினிலே -நீயே
பால்வார்த்த
பாவையடி

சாலை மரங்களெல்லாம் -உனக்கு
சாமரம்
வீசுதடி

கோல மயிலெல்லாம் -உந்தன்
கோட்டில்
நடக்குதடி

ஓலைக் குடிசையிலே -நிலவு
ஒளிந்துனைப்
பார்க்குதடி

சேலைத் தழுவிடவே -காற்று
தேசங்கள்
சுற்றுதடி

காலை இளம்பரிதி -உன்னை
கண்டதும்
நாணுதடி

மாலை மயக்கத்திலே-பகலும்
மதிமயங்கி
சொக்குதடி
















No comments:

Post a Comment