Saturday, February 4, 2012

சொல்ல ஒரு சொல்லின்றி .........................

எத்தனைக் காலம் நித்திரை இழந்தேன்
என்பதை நீயும் அறிவாயா?
புத்தனைப் போலே இத்தனை இழந்தும்
புன்னகை தொலைத்தேன் புரிவாயா?
சித்தனைப் போலே இத்தரை வாழ்தல்
சின்ன எளிய செயலா சொல்?
அத்தனை சொல்லும் ஆழ்குள நெஞ்சில்
அன்பே ஒருசொல் கிடைக்கவில்லை
பித்தனைப் போலே பிதற்றியே நானும்
பிறிதொரு சொல்லும் பிறக்கவில்லை
மொத்தமாய் எவனோ குத்தகை எடுத்து
முகிலில் அலைந்திட விட்டானா?
கத்தியே நானும் கவிதை படைத்தும்
கருணை இல்லையோ தமிழ் தாயே
புத்தியில் புகுந்து புதுசொல் கொடுத்திடு
புத்துயிர் அடையும் என்காதல்

No comments:

Post a Comment